பேரழிவுகளுக்கு பொறுப்பேற்க முடியாது : IDH வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம கொரோனா குழுவிலிருந்து ராஜினாமா

புகழ் பெற்ற சிறப்பு வைத்தியரான ஆனந்த விஜேவிக்ரம, கொரோனா கட்டுப்பாடு குறித்த மருத்துவக் குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து அவர் சுகாதார சேவைகள் இயக்குனர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

குழுக்களால் எடுக்கப்பட்ட சில முடிவுகளுடன் உடன்பட முடியாது என்று கூறி அவர் ராஜினாமா செய்துள்ளார்.

தொழில்நுட்பக் குழுவின் அறிவுறுத்தலின் படி நாட்டை மூடுவது மற்றும் தடுப்பூசி போடும் செயல்முறை மேற்கொள்ளப்படவில்லை என்றும் வேறு காரணங்களால் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் எதிர்கால பேரழிவுகளுக்கு அவர் பொறுப்பேற்க முடியாது என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.