காணிப் பிரச்சினை: மண்வெட்டியால் தாக்கி குடும்பஸ்தர் கொலை!

குருநாகல் மாவட்டம், கொட்டவெஹர பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொட்டவெஹர – திகென்னேவ பகுதியில் இரு குழுக்களுக்கு இடையிலான காணிப் பிரச்சினை காரணமான 44 வயதுடைய குடும்பஸ்தர் மண்வெட்டியால் தாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பில் ஒரு தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.