வவுனியாவில் மேலும் 8 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

வவுனியாவில் கொரோனாத் தொற்றுக் காரணமாக மேலும் 8 மரணங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனாத் தொற்றுக் காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 08 பேர் நேற்று மரணமடைந்துள்ளனர். இவர்களில் 6 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.

இந்நிலையில், மரணித்த 8 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.