வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் குடும்பஸ்தர் மாட்டினார்!

கேகாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கேகாலை நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், வெளிநாட்டுத் துப்பாக்கி ஒன்றுடனும், 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி ரவைகள் ஒன்பதுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.