மனைவியின் கள்ளக் காதல் : வெட்டிக்கொலை செய்துவிட்டு தன்னுயிரை மாய்த்துக்கொண்ட கணவன் (Video)

கொழும்பு, கெஸ்பேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடபாத பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியைக் கழுத்தை வெட்டிக் கொலை செய்த பின்னர் தானும் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் பட்டுவந்தர, மடபாத பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது நபர் மனைவியைக் கொலை செய்துவிட்டு தானும் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

பெண்ணுக்கு இருந்த மற்றோர் காதல் தொடர்பே காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மனைவியை கொலை செய்து விட்டு , தற்கொலை செய்து க◌ாண்ட நபர் , ஒரு கடிதத்தில் தனது மனைவி இன்னொரு நபரோடு காதல் வயப்பட்டிப்பதாக அறிந்து கொண்ட பின் இந்த முடிவுக்கு எழுதியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.