வவுனியாவில் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவால் பலி!

வவுனியா மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனாத் தொற்று காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 7 பேர் நேற்று மரணமடைந்துள்ளனர்.

வவுனியா வடக்கு, தரணிக்குளம், பெரியஉலுக்குளம், பூந்தோட்டம், புளியங்குளம், பட்டானிச்சூர் (இரண்டு நபர்கள்) ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனாத் தொற்றால் மரணித்தவர்களாவார்கள்

இந்நிலையில் மரணித்த 7 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.