மறைந்த ஊடகவியலாளர் பிரகாஷின் திருவுருவப்படத்துக்கு அஞ்சலி!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அண்மையில் காலமான இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷின் திருவுருவப்படத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர்.

யாழ்., தென்மராட்சி, வெள்ளாம்போக்கட்டியிலுள்ள பிரகாஷின் வீட்டுக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அன்னாரின் திருவுருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தியதுடன் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து ஆறுதலும் கூறினர்.

மாற்றுத்திறனாளியான இளம் ஊடகவியலாளர் பிரகாஷ் தசையழிவு நோய்த்தாக்கத்தால் சக்கரநாற்காலியின் துணையோடு இயங்கிய நிலையிலும், தனது திறமையாலும் எழுத்தாற்றலாலும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்த ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.