ஆலய வாயிலில் விழுந்து மூதாட்டி மரணம்!

வல்வெட்டித்துறையில் இருந்து கொட்டடியில் உள்ள ஆலயத்துக்கு வந்த மூதாட்டி ஒருவர் ஆலய வாயிலிலேயே சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

ஸ்ரீராஜேந்திரா சந்திரவதனா (வயது 68) என்னும் நெடியகாடு, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெற்றது.

இவரது உடலம் பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரது மரண விசாரணையைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.