மேலுமொரு கர்ப்பிணிப் பெண் கொரோனாவால் பரிதாபச் சாவு!

கொரோனா காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பவதி சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

நாவாந்துறையைச் சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவர்.

குறித்த கர்ப்பவதி காய்ச்சல் காரணமாக கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.