பிரதமர் மகிந்தவுக்கு எதிராக புலம்பெயர்ந்த இத்தாலி வாழ் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம் (வீடியோ)

ஜி20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக புலம்பெயர்ந்த இத்தாலி வாழ் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கேட்டு இலங்கையில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இப்போது ஜி20 சர்வமத மாநாடு நடைபெற்ற இத்தாலி பொலங்ஞோ பகுதியில் சிங்கள மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் , தற்போதைய அரசுக்கும் எதிரான கோசங்களோடு மக்கள் , இத்தாலிய காவல்துறையின் அனுமதியோடு மட்டுப்படுத்தவர்களோடு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இலங்கை அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் வீதிக்கு வந்து வெளிநாடுகளில் போராடுவது அரிதான ஒரு நிகழ்வாகும். இலங்கை அரசுகளுக்கு ஆதரவாக இருந்த அநேகர் இப்போது அரசுக்கு எதிரான ஒரு மனோ நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பதிலளிக்கக் கோரி இத்தாலியில் உள்ள இலங்கை வாழ் சிங்கள மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

இத்தாலியில் உள்ள இலங்கை கத்தோலிக்க பாதிரியார்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் என்று இலங்கையில் உள்ள கத்தோலிக்க பணியகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தாலி சென்றார்.

கத்தோலிக்க திருச்சபையால் , ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து இத்தாலியின் வத்திக்கானை தவறாக வழிநடத்த முயல்வதாக பிரதமரது வருகை குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டன.

எவ்வாறாயினும், இத்தாலி விஜயத்தின் போது பிரதமருக்கு , திருத்தந்தையை சந்திக்கும் திட்டம் இல்லை என்று வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியது .

பிரதமரும் வெளியுறவு அமைச்சரும் இத்தாலியின் போலோக்னாவில் இத்தாலிய பிரதமர் மற்றும் இத்தாலி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மற்ற முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட சர்வதேச நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பிரதமரும் வெளியுறவு அமைச்சரும் போலோக்னாவில் நடந்த நிகழ்வுகளின் முடிவில் இத்தாலியை விட்டு வெளியேறுவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னைய அரசும் , தற்போதைய அரசும் சேர்ந்தே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.