நோர்வே நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்சாயினி வெற்றி பெற்றுள்ளார்

யாழ். கைதடியை பூர்வீகமாக கொண்ட, நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவைச் சேர்ந்த தமிழ் பெண்ணான ஹம்சாயினி குணரத்தினம் நோர்வேயின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைப் விட்டு மூன்று வயதில் ஹம்சாயினி குணரத்தினம் நோர்வேக்கு புலம்பெயர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ம் திகதி ஹம்சாயினி குணரத்தினம் ஒஸ்லோவின் பிரதி மேயராக நியமிக்கப்பட்டிருந்தார். 2019ம் ஆண்டில் மீளவும் அந்தப் பதவிக்கு தெரிவாகியிருந்தார்.

நேற்றைய தினம் நடைபெற்ற நோர்வே நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்சாயினி குணரத்தினம் வெற்றியீட்டியுள்ளார்.

நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவின் பிரதி மேயராக இருந்த செல்வி கம்சாயினி குணரத்தினம் தை மாதம் 5, 2019ல் இலங்கை வந்திருந்த போது ஜனதிபதி மைத்ரிபால சிரிசேனவை சந்தித்திருந்தார்.அத்தோடு பல இடங்களுக்கும் பயணித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.