அயர்லாந்து அணியிடம் ஜிம்பாப்வே தோல்வி.

முன்னதாக நடைபெற்ற அயர்லாந்து- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் தொடரை அயர்லாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

ஜிம்பாப்வே-அயர்லாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே 34 ஓவரில் 134 ரன்னில் சுருண்டது. டக்வொர்த் விதிப்படி அயர்லாந்துக்கு 32 ஓவரில் 118 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 22.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3 போட்டி கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. 2-வது போட்டி முடிவில்லை. இரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் தொடரை அயர்லாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

Leave A Reply

Your email address will not be published.