உலக இராணுவ விளையாட்டு போட்டிகளில் இலங்கை விமானப்படை குத்துச்சண்டை வீரர்கள்…

58 வது உலக இராணுவ குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை விமானப்படை பெண்கள் குத்துச்சண்டை அணியின் நான்கு பெண் வீராங்கனைகள் இன்று (செப் 16) ரஷ்யாவின் மாெஸ்கோ நகரிற்கு பயணமானார்கள்.

குறித்த குத்துச்சண்டை குழாமிற்கு சர்வதேச குத்துச்சண்டை நடுவர் ஸ்கொட்ரன் லீடர் பிரசாத் விஜேசிங்க தலைமை தாங்குவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

புறப்பட்டுச் செல்லும் குத்துச்சண்டை குழாத்தினருக்கு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரண தனது வாழ்த்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.