சின்னத்திரையில் பிரம்மாண்டமாக தொடங்கப்போகும் பிக்பாஸ் சீசன்5.

பிக்பாஸ் 5வது சீசன் தான் தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக தொடங்கப்போகும் அடுத்த நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சிக்கான புரொமோக்கள் எல்லாம் வரத் தொடங்கிவிட்டன. போட்டியாளர்களும் சென்னையில் உள்ள பெரிய ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொகுப்பாளினி பிரியங்கா, மிலா, மாடலிங் துறையில் இருக்கும் சிலர் என உறுதியாகியுள்ளனர்.

இந்த நிலையில் தான் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி உலா வருகிறது. அது என்னவென்றால் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் கண்மணி சேகர் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் சிலர் இது வெறும் வதந்தி என கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.