பல்கலைகழகத்தில் துப்பாக்கி பிரயோகம் – 8 பேர் பலி.

ரஸ்யாவின் பேர்ம் நகரில் பல்கலைகழகமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொலையாளி பல்கலைகழகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கி பிரயோகம் ஆரம்பித்ததும் ஆசிரியர்களும் மாணவர்களும் பாதுகாப்பான இடங்களில் ஒளிந்து கொண்டனர் சிலர் மாடிகளில் இருந்து குதித்துள்ளனர்.

மாணவர் ஒருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ள பொலிஸார் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டு அவரை கைதுசெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மாணவர்கள் கட்டிடத்திலிருந்து வெளியே பாய்ந்தனர் என பேராசிரியர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

அச்சத்தில் அலறியவாறு அவர்கள் மாடியிலிருந்து குதித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.நான் சத்தத்தை கேட்டேன் அனைவரும் வேறு திசைகளில் தப்பியோட ஆரம்பித்தனர்,நான் இரண்டாவது கட்டிடத்திற்கு தப்பிச்சென்ற பின்னரும் துப்பாக்கி சத்தங்கள் கேட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

ஏனையமாணவர்கள் தங்களை வகுப்பறைகளிற்குள் பூட்டிக்கொண்டனர் என அவர் தெரிவித்துள்ளார். வகுப்பறைகளில் 60 மாணவர்கள் காணப்பட்டனர் நாங்கள் அதனை மூடினோம் கதிரைகளால் பாதுகாத்தோம் என மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மாடியிலிருந்து குதிக்கும் படங்களை ரஸ்ய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் தனித்தே செயற்பட்டிருக்கின்றார் அவருக்கு மத கொள்கை பின்னணி எதுவும் கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.