கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் பெருந்தொகையான கென்டேனர்கள்!

சுமார் 800 கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன என உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

வரும் மாதங்களுக்கு போதுமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதற்காக உணவுப் பொருட்களின் பங்குகளை விரைவில் விடுவிப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.

இதனால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் உள்ள சிரமம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.