சிறீதரன் எம்.பியின் அலுவலகம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு!

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகமான அறிவகம் பொலிஸாரால் இன்று முற்றுகையிடப்பட்டது.

அலுவலகத்துக்கு வந்து செல்லும் அனைவரும் பொலிஸாரால் அடாவடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அலுவலகத்துக்கு உள்ளே எவரையும் உள்ளே செல்ல விடாமல் பொலிஸார் தடுத்தனர் எனவும், கரைச்சி, பளை பிரதேச சபையின் தவிசாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினரைச் சந்திக்க உள்ளே சென்றபோது பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

குறித்த பொலிஸாரிடம், “ஏன் இவ்விடத்தில் நிற்கிறீர்கள்? எனது அலுவலகத்துக்கு வருவோருக்கு ஏன் தடையை ஏற்படுத்துகிறீர்கள்?” என்று சிறீதரன் எம்.பி. பொலிஸாரிடம் கேட்டதற்குப் பதிலளித்த பொலிஸார், இது”மேலிடத்து உத்தரவு” என்று கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.