இரு வேறு விபத்துகளில் இருவர் பரிதாப மரணம்!

சீதுவ, ஹலாவத்த ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு விபத்துக்களில் இருவர் மரணமடைந்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – நீர்கொழும்பு வீதி, சீதுவ நகருக்கு அருகில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற கலுதுபிட வீதி, ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞரே மரணமடைந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, ஹலாவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹலாவத்த குருநாகல் வீதி, முஹூனுவட்டவன பிரதேசத்தில் லொறி ஒன்று, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.