கொரோனாவால் மேலும் 51 பேர் சாவு! – நாளாந்த மரணங்களில் வீழ்ச்சி.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 731ஆக அதிகரித்துள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று உயிரிழந்த 51 பேரில் 29 ஆண்களும், 22 பெண்களும் அடங்குகின்றனர்.

இதில் 5 ஆண்கள், 5 பெண்கள் என 10 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 41 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 24 ஆண்களும், 17 பெண்களும் அடங்குகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.