ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டவர் பிரதமரை சந்தித்தார்.

ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே அவர்கள் இன்று (28) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களை சந்தித்தார்.

சேவையை பொறுப்பேற்பதற்கு ரஷ்யாவிற்கு புறப்பட்டு செல்வதற்கு முன்னதாக சேவை குறித்து திட்டமிடும் வகையில் பிரதமருடனான இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான வரலாற்று நட்பை நினைவுகூர்ந்த பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கு திருமதி.ஜனிதா ஏ லியனகே அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

சிரேஷ்ட பேராசிரியர் ஜனிதா ஏ லியனகே அவர்கள் இப்பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னதாக கம்பஹா விக்ரமாராச்சி சுதேச பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பணியாற்றினார்.

காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரியின் புகழ்பெற்ற பழைய மாணவியான ஜனிதா ஏ லியனகே அவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவராகவும் சேவையாற்றியுள்ளார்.

குறித்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமர் அலவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்க்ஷ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.