தற்போதைய கொரோனாவுக்கு மத்தியிலும் சிறப்பான அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பு.

ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு திட்டத்தினை இந்த அரசாங்கம் தற்போதைய கொரோனாவுக்கு மத்தியிலும் சிறப்பான அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றது.பாரளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன்.

செழிப்பான நகரங்கள் 100 அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் சி.சந்திரகாந்தன் அவர்களின் முன்மொழிவுக்கு அமைய மட்டக்களப்பு மாநகரயின் ஊறணிச்சந்தி தொடக்கம் திருப்பெருந்துரை வரையான நடைபாதை மற்றும் சிறுவர் பூங்கா மற்றும் ஓய்வெடுக்கும் இடங்கள் தொடர்பான அபிவிருத்தித்திட்டம் நகர அபிவிருத்தி இராஜங்கயமைச்கினால் சுமார் 18மில்லியன் ரூபா செலவில் மாவட்ட நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கிழ் ஊறணி நகர அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் ஊறணி நாற்சந்தியினை அழகுபடுத்தும் வேலைத் திட்ட நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் தலைமையில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற இவ் நிகழ்வில் கிழக்கு மாகாண நகர அபிவிருத்திதிட்ட பணிப்பாளர். ஜெ.லீயனகே மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் மற்றும் மட்டு மாநகரசபை ஆணையாளர் எஸ்.தாயாபரன் மண்முனை வடக்கு பிரதேச செயலக உயர் அதிகாரிகள் தமிழர் விடுதலை புலிகள் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் இவ் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.