42 நாட்களுக்குப் பின்னர் எதிர்வரும் 1ம் திகதி முதல் நாடு திறக்கப்படுகிறது

நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவை அக்டோபர் 01 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ராணுவ தளபதி மேலும் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 20 இரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு விதிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.