தேசிய தொழில் வழிகாட்டல் வார ஆரம்ப நிகழ்வு.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களமானது “நாட்டுக்கு சுமையில்லாத உழைக்கும் தலைமுறை” எனும் தொனிப்பொருளில் ஐப்பசி 04 ஆம் திகதி முதல் ஐப்பசி 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தேசிய தொழில் வழிகாட்டல் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.10.2021) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் இணைய நிகழ்நிலை ஊடாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் திரு.எல். இளங்கோவன் அவர்கள் கலந்துகொண்டதோடு, மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாகாணக் கல்விப்பணிப்பாளர்கள், வலயக் கல்விப்பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் ஆலோசகர், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.