தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 80 ஆயிரம் பேர் இதுவரை கைது!

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை குற்றச்சாட்டில் மேலும் 110 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் நான்கு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 55 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும் 13 இடங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிப் பயணித்த குற்றச்சாட்டில் 52 வாகனங்களில் வந்த 99 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.