இலங்கையில் 782 பேருக்குக் கொரோனத் தொற்று!

இலங்கையில் இன்று 782 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 22 ஆயிரமாக அதிகரித்துள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 477 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 77 ஆயிரத்து 851 ஆக உயர்வடைந்துள்ளது எனவும் அரச தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.