இலங்கையில் மேலும் 40 பேர் கொரோனாவால் மரணம்!

இலங்கையில் மேலும் 40 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் சாவடைந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் பதிவான கொரோனா சாவுகளின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்த 40 பேரில் 22 ஆண்களும், 18 பெண்களும் உள்ளடங்குகின்றனர் என்று அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 3 ஆண்கள், பெண் ஒருவர் என 4 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 36 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 19 ஆண்களும், 17 பெண்களும் அடங்குகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.