தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 67 பேர் கைது!

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 67 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 67 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் இன்று காலை விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 122 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும் 13 பிரதேசங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிப் பயணித்த குற்றச்சாட்டில் 56 வாகனங்களில் வந்த 101 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.