காத்தான்குடியைச் சேர்ந்தவர் அச்சுவேலியில் சடலமாக மீட்பு.

யாழ்., அச்சுவேலி நகரில் உள்ள சிகரம் பிளாசா கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அச்சுவேலி உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழிரே இவ்வாறு இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி, அமானுல்லா வீதியைச் சேர்ந்த ஆதாம்பாவா முகம்மது றவுஸ் (வயது – 46) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை அவர் அறையிலிருந்து வெளியில் வராத நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.