கோவில் பிரச்னையை விசாரிக்க சென்ற எஸ்ஐ-க்கு அரிவாள் வெட்டு!

ஆர்.எஸ்.மங்கலம் அருகே கோவில் பிரச்னையை விசாரிக்க சென்ற எஸ்ஐ-க்கு அரிவாள் வெட்டு விழுந்தது, இச்சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே அனிச்சக்குடி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் வழிபடுவதில் இரு தரப்பினரிடையே இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக பிரச்சனை இருந்து வந்துள்ள நிலையில் இன்று அனிச்சகுடியில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு ஆர்.எஸ். மங்கலம் அதிமுக ஒன்றிய செயலாளர் நந்திவர்மன் வழிபடச் சென்றபோது ஆலயத்தில் துரைராஜ் என்பவர் கோயில் பூஜை செய்து திருநீரை எடுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மற்றொரு தரப்பை சேர்ந்த மலைராஜ் என்பவர், துரைராஜ் என்பவரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட நிலையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விசாரிக்க சார்பு ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் சென்றுள்ளார். இதையடுத்து மலைராஜை விசாரித்துக் கொண்டிருந்தபோது சார்பு ஆய்வாளருக்கும், மலைராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அதில் மலைராஜ் திடீரென அரிவாளால் சார்பு ஆய்வாளர் தமிழ்செல்வன் தலையில் வெட்டினார், இதில் அவருக்கு பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டு ரத்தம் பீரிட்டது.

இதனையடுத்து சார்பு ஆய்வாளரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர், மேலும் சார்பு ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய மலைராஜை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் கூறுகையில் விசாரிக்கச் சென்ற சார்பு ஆய்வாளர் தமிழ்ச்செல்வனை குடிபோதையில் இருந்த மலைராஜ் என்பவர் திடீரென அறிவாலால் தாக்கியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, தாக்குதல் நடத்திய மலைராஜா கைது செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது, காயமடைந்த சார்பு ஆய்வாளருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.