விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு.

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் சாவகச்சேரியில் நேற்று மாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இளைஞர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரியின் மடத்தடிப் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து நிகழ்ந்திருந்தது.

படுகாயமடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுவந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சங்கத்தானை, சாவகச்சேரியைச் சேர்ந்த நிரோஷ் (வயது 24) என்றும் அண்மையிலேயே வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு திரும்பியிருந்தவர் என்றும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.