உணவுப் பண்டங்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு!

எரிவாயு, பால் மா மற்றும் கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் உணவகங்களில் உணவுப்பண்டங்களின் விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன.

அதன்படி, ஒரு கப் பால் தேநீர் 70 ரூபாவாகவும், தேநீர் 30 ரூபாவாகவும் உயர்ந்துள்ளன.

ரோல்ஸ் ஒன்று 60 ரூபா, முட்டை ரோல்ஸ் ஒன்று 65 ரூபா மற்றும் பணிஸ் ஒன்று 50 ரூபா விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் 200 ரூபாவுக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

மரக்கறி உணவுப் பொதி 160 ரூபா, மீன் உணவுப் பொதி 180 ரூபாய் மற்றும் கோழி இறைச்சி உணவு பொதி 240 ரூபா என்ற அடிப்படையில் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.