தடை விதித்துள்ள நிலையில் சீனா பசளை கப்பல் இலங்கைக்கு.

சீனாவின் கரிம பசளை மெட்ரிக் டொன் 20 ஆயிரத்துடன் கப்பல் ஒன்று இலங்கையை நெருங்கியுள்ளது.

இன்னும் சில தினங்களில் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை நெருங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சீனாவின் பசளைக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ள நிலையிலேயே மேற்படி அந்நாட்டு பசளையை கப்பல் ஒன்று இலங்கைக்கு கொண்டுவருகிறது.

செப்டம்பர் 22ம் திகதி சீனாவின் சண்டாகோ துறைமுகத்தில் இருந்து குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பித்ததோடு கடந்த இருத்தினங்களுக்கு முன் சிங்கப்பூரில் நங்கூரமிட்டிருந்தது என்றும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.