கொக்குத்தொடுவாய் கிராமசங்க பகுதிக்கான வீதிப் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.

கொக்குத்தொடுவாய் கிராமசங்க பகுதிக்கான வீதிப் புனரமைப்பு பணிகள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது!!

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் விஷேட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களிடம் அப்பகுதி மக்கள் விடுத்த வேண்டுகோளை அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் கிராமசங்க பகுதிக்கான 1Km நீளமான காபெட் வீதி புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரால் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், ஊர்மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.