விவசாயிகளோடு பேச்சு வார்த்தைக்கு போராட்ட களத்திற்கு வந்த மஹிந்த துரத்தப்பட்டார். (வீடியோ)

அனுராதபுரம் ரம்பேவா பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போல உடையணிந்து வாகனத்தில் வந்திறங்கிய ஒருவருக்கு எதிராக போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விவசாயிகள் போராட்டத்தின் மத்தியில், அவர்களோடு பேச மகிந்த வந்திறக்குவது போல முகமூடி அணிந்து வந்த ஒருவருக்கு எதிராக கூச்சலிட்டு துரத்தும் காட்சி வைரலாகிவருகிறது .

இந்த நவீன முறையிலான ஆர்ப்பாட்டத்தை ஏற்பாட்டாளர்களே ஏற்பாடு செய்ததாக சம்பவ இடத்தில் இருந்த செய்தியாளர்கள் தெரிவித்தனர். அதேபோல அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமவின் கொடும்பாவியும் விவசாயிகளால் எரிக்கப்பட்டது.

வீடியோ

Leave A Reply

Your email address will not be published.