வருடாந்த விசேட இரத்ததான முகாம்.

கொரோனா கால கட்டத்தில் வைத்தியசாலைகளில் நிலவும் இரத்தப் பற்றாக் குறையை கருத்திற் கொண்டு கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 15 வருட காலமாக மடவளை வை. எம். எம். ஏ. பேரவையினால் வருடாந்தம் நடத்தப்படும் விசேட இரத்த தான முகாம் 19-10-2021 காடியன் பேங்குவெட் மண்டபத்தில் மடவளை வை. எம். எம். ஏ. கிளையின் தலைவர் எம். எம். ரியாஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி 19 வது விடுத்தம் இரத்த தானம் வழங்கி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த இரத்த தான முகாமில் ஆண்பெண் இருபாலாரும் கலந்து கொண்டனர். குறிப்பட்ட 300 நபர்களுக்கு மாத்திரமே இந்த இரத்த தானம் முகாமில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கியிருந்தனர்.

சுகாதார விதிமுறைகளைப் பேணி முகம் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பேணி ஆண் பெண் இருபாலாரும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து இரத்த தானம் வழங்கி வைத்தனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.