அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!

டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை – அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இலங்கை அணி பதும் நிஷங்கா, வாநிந்து ஹசரங்கா ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது.

இதில் அதிகபட்சமாக வாநிந்து ஹசரங்கா 71 ரன்களையும், பதும் நிஷங்கா 61 ரன்களைச் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் ஜோஷுவா லிட்டில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய அயர்லாந்து அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 18.3 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் தீக்‌ஷனா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் இலங்கை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி, உலகக்கோப்பை சூப்பர் 12-க்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.