வடக்கில் தேர்தல் விதிமுறை மீறல்கள் அதிகரிப்பு

2020ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இதேநேரம் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் விதிமுறை மீறல்களின் பதிவுகளும் அதிகரிக்கும் நிலையில் இதுவரை வடக்கில் 310 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் அதிகப்படியானவை யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்திலேயே கானப்படுகின்றது. இங்கே 110 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதோடு வவுனியா மாவட்டத்தில் 71 முறைப்பாடுகளும் ,மன்னார் மாவட்டத்தில் 38 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 35 முறைப்பாடுகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 56 முறைப்பாடுகளுமாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 145 முறைப்பாடுகளும் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 165 முறைப்பாடுகளாகவே மொத்தம் 310 முறைப்பாடுகள் கானப்படுகின்றது.

Comments are closed.