இரத்தக் காயங்களுடன் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு!

பதுளை மாவட்டம், பண்டாரவளையின் இருவேறு பகுதிகளில் இரத்தக் காயங்களுடன் இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இருவரின் சடலங்கள் கிடக்கின்றன என்று பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

அதற்கமைய பண்டாரவளை – நாயபெத்த தோட்டம், கோணமுட்டாவ வீதியின் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வடிகான் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

அதேபோன்று பண்டாரவளை – மீரியகஹ சந்தியில் உள்ள வடிகானுக்கு அருகிலிருந்து மற்றுமொரு ஆணின் சடலம் மீட்கப்பட்டது.

குறித்த இரு சடலங்களும் இரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டன. சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.