வணக்கஸ்தல அழிவுகளுக்கான கொடுப்பணவு வழங்கும் நிகழ்வு.

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக சொத்திழப்பு, கடும் பாதிப்புற்றோர்க்கான கொடுப்பணவு , வணக்கஸ்தல அழிவுகளுக்கான கொடுப்பணவு ஆகியவற்றுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (25) மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

நீதி அமைச்சின் இழப்பீட்டு அலுவலகத்தினால் நெறிப்படுத்தப்படும் குறித்த இழப்பீடு வழங்கும் நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் 80 பயனாளிகளுக்கு குறித்த இழப்பீட்டு காசோலை இன்று வழங்கி வைக்கப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஸ்ரென்லி டீமெல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ. காதர் மஸ்தான் அவர்கள் பயனாளிகளுக்கான காசோலைகளை இன்று வழங்கி வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.