முல்லைத்தீவு இளைஞர்கள் அரச வேலை வாய்ப்புக்கு பயிலுனராக தெரிவு.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் சிபாரிசின் பேரில் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த
18 இளைஞர்கள் அரச வேலை வாய்ப்புக்கு பயிலுனராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான நியமனக் கடிதங்கள் இன்று மாலை 3:00 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் திரு.ஜெயக்காந், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சத்தியசுதர்சன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் கதிரவேலு செவ்வேள் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.