ஜூடோ போட்டிகளில் பங்கேற்க இராணுவ வீரர்கள் பயணம்….

இந்த மாதம் 28ம் திகதி முதல் நவம்பர் 04ம் திகதி வரை பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெறவுள்ள 2021 உலக இராணுவ ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை இராணுவத்தின் சார்பில் ஒன்பது வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

போட்டிகளில் கலந்துகொள்வதற்கு பிரான்ஸ் பயணமாகவுள்ள இராணுவ ஜூடோ வீரர்கள், அவர்களின் பயிற்சியாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் தலைவரும், பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க இலங்கை இராணுவ விளையாட்டுக் குழு இந்த போட்டியின் போது கொவிட் – 19 பரவலைத் தடுக்கும் உயிரியல் பாதுகாப்பு முறைக்கு அமைய செயற்படவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.