அமெரிக்க தூதுவர் அலினா பதவியை நிறைவு செய்து நாடு திரும்புகிறார்

தனது பதவி காலத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலினா பி. டெப்லிட்ஸ் அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உதவிய திருமதி அலினாவின் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி, கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குதல் உள்ளிட்ட செயல்பாட்டில் அமெரிக்க அரசாங்கத்தின் உதவிக்கு நன்றி தெரிவித்தார்.

தடுப்பூசி மற்றும் கோவிட்-எதிர்ப்பு செயல்முறைகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை தூதுவர் பாராட்டியதுடன், அவர்களின் கடமைகளை எளிதாக்கும் ஆதரவிற்காக ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.

திருமதி அலினா பி. டெப்லிட்ஸ் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, அமெரிக்க பிரதித் தூதுவர் மார்ட்டின் கெல்லி, அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் சூசன் வோல்கே ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Leave A Reply

Your email address will not be published.