வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

யாழ்., வடமராட்சி கிழக்கு – மாமுனைப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சகோதரி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆ.ஞானக்குமார் (வயது – 38) என்பவரே உயிரிழந்துள்ளார்.

முகமாலை – இத்தாவில் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்குச் சென்றிருந்தவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பளைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.