தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருவதால் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, கன மழையும் பெய்யுமென கணிக்கப்பட்டிருக்கிறது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யகூடும். 31ம் தேதி முதல் 2ம் தேதி வரை தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்காலில் கன மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

இதனிடையே கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.