2024 தேர்தலில் நிற்கமாட்டோம்! நாம் தமிழர் கட்சி சீமான் அதிரடி முடிவு.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 2024 தேர்தல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சிகளில் நாம் தமிழர் கட்சியும் ஒன்று. இருப்பினும் இக்கட்சியின் ஒருங்கிணைபாளர் சீமான் அவ்வப்போது பேசும் சில பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்துவதுண்டு.

குறிப்பாக அவர் கோபத்தில் ஒரு சில அரசியல் தலைவர்களை இழிவாக பேசியதுண்டு. இது குறித்து அவர் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நான் தனிப்பட்ட முறையில் அரசியல் தலைவர்களை இழிவாக பேசுவதை நான் வரவேற்கவில்லை.

அப்படி நானே பேசியிருந்தாலும், இது தவறுதான், சில நேரங்களில் கோபத்தில் அப்படி பேசிவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் 2024 தேர்தல் குறித்து கேட்ட போது, திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலக்கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணி அமைத்தால், நாங்கள் 2024 தேர்தலில் நிற்கமாட்டோம். அவர்களை ஆதரிப்போம்.

2026 சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கான களத்தை நாங்கள் பார்த்து கொள்வோம் என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.