அநுராதபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் கொரோனா அதிகரிப்பு.

அநுராதபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினா் தெரிவித்துள்ளனா்.

அநுராதபுர மாவட்ட தொற்று நோய் தொடர்பான விசேட வைத்திய நிபணர் வைத்தியா் ஆர்.எம். ரத்நாயக்க தெரிவித்துள்ளாா். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அதற்கமைய அநுராதபுரம் மாவட்டத்தில் அதிகளவான கொரோனா நோயாளா்கள் அடையாளம் காணப்படுவதாக கடந்த வாரம் அறியவந்தது, 5 நாட்களில் 650 நோயாளர்களுக்கும் அதிகளவானவா்கள் அடையாளம் காணப்பட்டனா்.

அநுராதபுரம் மாவட்டத்தில் ஆரம்ப பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலருக்கும் தொற்ற உறுதிப்படுத்தப்பட்டிருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.