ஆஸ்கர் ஆஃப்கானின் முடிவு அதிர்ச்சியாக இருந்தது – முகமது நபி.

டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் – நமீபியா அணிகள் விளையாடின.

இதில் ஆஃப்கானிஸ்தான் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. மேலும் இப்போட்டியுடன் ஆஃப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஆஸ்கர் ஆஃப்கான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் ஆஸ்கர் ஆஃப்கானின் முடிவு மிகவும் அதிர்ச்சியளித்ததாக ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நபி, “இன்றைய போட்டிக்கு முன்னதாக ஆஸ்கர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இதன் காரணமாக இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்று எண்ணினோம்.

அதற்கேற்றார் போலவே எங்கள் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் முக்கியமாக பந்துவீச்சாளர்கள் போட்டியை எங்கள் பக்கம் திருப்பிவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.