மீன் சந்தை துர்நாற்றம் ; பொதுமக்கள் அசெளகரியம்.

மினுவாங்கொடை நகர மையத்தில், “அத்தனகலு ஓயா” பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள மீன் சந்தைப் பகுதியில் துர் நாற்றம் வீசுவதால், பல்வேறு அசெளகரியங்களையும் எதிர்நோக்கி வருவதாக, பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மினுவாங்கொடை நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் மீன் சந்தை அமைந்துள்ளதால், இப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக துர் நாற்றம் வீசி வருவதாகவும், இதனால் இப்பகுதியில் உள்ள பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதிக்குச் சென்று பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாகவும், பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த மீன் சந்தையின் நிலையினைக் கருத்திற் கொண்டு, மினுவாங்கொடை நகர சபை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.