தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 84 ஆயிரம் பாதுகாப்பு கடமையில் – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

தேர்தல் கால பாதுகாப்பிற்கென 75 ஆயிரம் பொலிசாரும் 9 ஆயிரம் சிவில் பாதுகாப்பு படையினரும் என மொத்தம் 84 ஆயிரம் பேர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

75 ஆயிரம் அதிகாரிகளை பயன்படுத்துவதற்கென திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

அதற்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 9 ஆயிரம் வீரர்களும் இணைக்கப்பட்டு ஏறத்தாள 84 ஆயிரம் அளவிலான வீரர்களை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Comments are closed.