ஜனாதிபதி- பிரதமரின் தலைமையில் டீ.ஏ.ராஜபக்க்ஷ 54ஆவது நினைவு தினம்.

அமரர் டீ.ஏ.ராஜபக்க்ஷ அவர்களின் 54ஆவது நினைவு தினம் தங்காலை மஹவெல வீதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு அருகில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரது தலைமையில் இன்று (07) முற்பகல் இடம்பெற்றது.

புவக்தண்டாவ மகளிர் வித்தியாலயத்தின் மாணவிகள் டீ.ஏ.ராஜக்பக்ஷ நினைவு கீதத்தை இசைத்தனர். அதனை தொடர்ந்து அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்க்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான நாமல் ராஜபக்க்ஷ,எஸ்.எம்.சந்திரசேன, இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, டீ.வீ.சானக, ஜானக வக்கும்புர, தேனுக விதானகமகே, தென் மாகாண ஆளுநர் விலீ கமகே ஆகியோர் டீ.ஏ.ராஜபக்க்ஷ அவர்களது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செய்தனர்.

டீ.ஏ.ராஜபக்க்ஷ நினைவு தின குழுவின் சார்பில் தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கபில திசாநாயக்க மற்றும் பிரதான பிரதி செயலாளர் உபுல் திசாநாயக்க மற்றும் தென் மாகாண சபையின் தவிசாளர் சோமவங்ஷ கோதாகொட ஆகியோர் டீ.ஏ.ராஜபக்க்ஷ அவர்களது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர்.

தங்காலை வகேகொட புராதன வஜிரகிரிய விகாராதிபதி மிரிஸ்ஸே தம்மவங்ஷ தேரர் இதன்போது அனுசாசனம் நிகழ்த்தினார்.

கசாகல ரஜமஹா விகாராதிபதி தலம்பொருவே இந்திரசிறி சுமன தேரர், தங்காலை பொலொம்மாருவ வனவாச குடா விகாரையின் மஹாதிகாரி தம்மதின்ன மஹபிரிவெனாவின் குருத்யாதிகாரி மண்டாடுவே தீரானந்த தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் கலந்து கொண்டனர்.

வீரகெடிய மெதமுலனவிலுள்ள டீ.ஏ.ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் அவரது பாரியார் தோன தந்தினா சிமரசிங்க திசாநாயக்க ஆகியோரது நினைவிடத்திற்கு நேற்று (06) பிற்பகல் விஜயம் செய்த அதிமேதகு ஜனாதிபதி,பிரதமர், அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ ஆகியோர் அங்கு விளக்கேற்றி பெற்றோரை நினைவு கூர்ந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.